சாதிக்க வேண்டும் என்ற தன்னம் பிக்கையும், விடா முயற்சியும் நிறையவே இருந்தாலும், வசதியும், வாய்ப் பும் கிடைக்காததால் திறமை இருந்தும் எண்ணற்ற இளைஞர்கள் தவித்து வரு கின்றனர்.
அந்த வரிசையில் மயிலாடுதுறை மாவட் டத்தைச் சேர்ந்த இளைஞரும் ஒருவர். சிறு வயதிலேயே வலது பக்க காலினை இழந்தா லும் தடகளப் போட்டிகளில் பங்கேற்று சாதித் துள்ளார். இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சாதிக்க போராடி வரு வதாகவும், தமிழ்நாடு அரசு தனக்கு உதவிக் கரம் நீட்டினால் நாட்டிற்கும், மாநிலத் திற்கும் பெருமை சேர்ப்பேன் என்று கூறு கிறார் அந்த இளைஞர்.
அவரின் முயற்சிக்கு உதவ வேண்டு மென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் அருகேயுள்ள ஆறுபாதி கிராமத் தைச் சேர்ந்த கணவரை இழந்த லதா என்பவ ரின் 25 வயது மகனாவார் கலைச்செல்வன். பாரா தமிழ்நாடு தடகளப் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தந்தை இறந்து விட்டதால், கூலி வேலை செய்யும் தனது தாயின் வருமானத்தை வைத்து வறுமையில் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலேயே வலது காலினை இழந்தாலும், விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வரு கிறார்.
சர்வதேச அளவில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்று தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத் தோடு போராடி வரும் வீரர் கலைச்செல்வன் கூறுகை யில், 5 வயதாக இருக்கும் போது விபத்து ஒன்றில் எனது கால் துண்டாகி விட்டது. விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கால் அணிந்து நடந்து வருகிறேன். நன்றாக ஓடுவேன். கிரிக்கெட், வாலிபால் விளை யாடுவேன். ஆனால் முறையாக விளை யாடத் தெரியாது.
பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்ற பிறகுதான் எனக்கு விவரம் தெரிந்தது. பிளாஸ்டிக் கால்களை வைத்து பயிற்சி எடுத்து, முதல் முறையாக நான் 400 மீட்டர் ஓடி வெற்றி பெற்றேன். குறிப்பாக மாவட்ட அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டில் விளையாடிய பிறகு, புனேவில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்றேன்.
அங்கு விளையாடும் போது கால்கள் வீங்கி ரத்தம் வந்து பாதிக்கப்பட்டேன். அதனால் 100 மீட்டர் ஓட்டத்தில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். 200 மீட்டரில் மட்டும் நான்காம் இடம் பிடித்தேன். அங்கு வந்தோர் நவீன கால்களை அணிந்து ஓடினர். அப்போதுதான் அது பற்றி பலரிடமும் கேட்டு தெரிந்து கொண்டு, திருச்சியைச் சேர்ந்த மணிகண்ட ஆறுமுகம் என்பவர் மூலம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
பழைய செயற்கை காலை அணிந்து விளையாடி வருவதால், கடுமையான வலியுடன் கால்களில் ரத்தம் வந்து விடுகிறது. வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் உலக அளவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு தயாராகி வருகிறேன். “புதிய பிளேட் லெக்” வாங்க ரூ.6.30 லட்சம் செலவாகும். என்னிடம் பொருளாதார வசதி கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பா இறந்து விட்டார். அம்மா கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். நண்பர்கள் ஆதரவால் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
புதிய செயற்கை கால் வாங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் உதவி செய்தால் தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலக அளவிலான போட்டியில் பங்கேற்று இந்தியா விற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
இளைஞரின் சாதனை குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கணேசன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் கூறுகையில், கால்கள் இல்லாத தடகள வீரர்களுக்கு காலில் பொருத்தக்கூடிய “பிளேட் லெக்” எனப்படும் மாற்றுத்திறனாளிக்கான ஓடுதள கருவி மிக மிக முக்கியம். இந்த கருவி கிடைக்காமல், திறமை இருந்தும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு கலைச்செல்வன் தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு வறுமையும் ஒரு தடையாக உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்டினால் நிச்சயம் சாதித்து காட்டுவார்” என்றார்.
சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்று சாதிக்க துடிக்கும் தடகள வீரர் கலைச்செல்வனுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்யுமா?